Latest News

June 23, 2012

ஜெயலலிதா சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது
by admin - 0

அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி

இன்றைய தினம் கலைஞர் அவர்கள் செயற்குழுவைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி 4ஆம் தேதி சிறை போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்க்கிற அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறைசெல்ல இருக்கிறார்கள். ஜெயலலிதா திருந்துவார் என்று சிலபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இன்றைக்கு அல்ல. இன்னும் பத்து தலைமுறை ஆனாலும் அந்த அம்மா திருந்தவே மாட்டார்கள். திமுகவினரை யார் யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் அழிந்ததாக வரலாறு இருக்கிறதே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. எனவே நான் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை திமுகவினரை சிறைக்குள் அடைக்கிறார்களோ, அதே வேகத்திலே ஜெயலலிதாவும் சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார்.

« PREV
NEXT »

No comments