மீளக்குடியமர்விற்காக
காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும்
பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக
வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார். இன்றிரவு 7.30
மணியளவிலேயே இவர்களை இராணுவத்தினர்
வலுக்கட்டாயமாக கதறக்கதற வாகனங்களில்
ஏற்றிச்சென்றுள்ளனர். முறிகண்டியில்
பொது மக்களது நிலங்களை பறிக்கும்
செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம்
பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ள
நிலையிலேயே, இச்செயற்பாட்டை அவர்கள்
மேற்கொண்டுள்ளனர். முறிகண்டியில் தங்கியிருந்து சுமார் 64
குடும்பங்களை அவர்களது விருப்பமின்றி வலுக்
இரண்டு பஸ் மற்றும்
இரண்டு லொறி ஆகியவற்றில் ஏற்றி மீண்டும்
வவுனியாவிலுள்ள
முகாம்களுக்கு கொண்டு சென்றதாக தவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறான தடைகள் வந்தாலும் தமிழர் தாயக
பூமியை ஆக்கிரமிக்கும்
செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம்
திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் முறிகண்டியில்
நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர்
சி.சிறீதரன் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment