Latest News

June 21, 2012

வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.
by admin - 0

வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது. மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்ய்பட்ட வவனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பயிற்சி நிலையத்தினால் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

6 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறிக்கு கா.பொ.த (சா.த) பரீட்சையில் தோற்றிய 16 வயது முதல் 30 வயதுடைய இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சி, கணனி பிரயோக உதவியாளர், கணனி வன்பொருள் திருத்துனர், வானொலி தொலைக்காட்சி மறறும் கையடக்க தொலைபேசி திருத்துனர், ஆடை வடிவமைப்பாளர், மேலைத்தேய நடனம் மற்றும் கீழைத்தேய மேலைத்தேய சங்கீதம் ஆகிய பயிற்சி நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் 'நிலைய பொறுப்பதிகாரி, தேசிய இளைஞர் பயிற்சி நிலையம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கண்டி வீதி, வவுனியா எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments