இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் படம் ’மாரீயன்’. முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்திக்கொண்டிருக்கும் இயக்குனர் பரத்பாலாவிற்கும், தனுஷிற்கும் படப்பிடிப்பில் சண்டை நடந்ததாக தெரிகிறது.
தனுஷ் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்பட்டதால் படப்பிடிப்பிற்கு வந்த தனுஷ், தனது வரவை இயக்குனரிடம் கூறுமாறு உதவி இயக்குனரிடம் சொல்லிவிட்டு கேரவனிலேயே காத்திருந்திருக்கிறார்.
மற்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்த பரத்பாலா தனுஷை கண்டுகொள்ளவில்லையாம். நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் மறுபடியும் உதவி இயக்குனரை அழைத்து “ இன்றைய படப்பிடிப்பில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என தயவு செய்து இயக்குனரிடம் கேளுங்கள். இல்லையென்றால் அவரையே நேரடியாக நான் எப்போது வரவேண்டும் எனறு சொல்லச் சொல்லுங்கள்” என கூறிவிட்டு கோவமாக படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாராம்.
இதையறிந்த இயக்குனர் பரத்பாலா ஃபோனில் தனுஷை தொடர்புகொண்டு பேசிய போது “தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன் தான்” என தனுஷ் காட்டமாக பேசியதாக தெரிகிறது. இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் இப்படி ஒரு மோதல் நடந்ததை அறிந்த படக்குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தனுஷ் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்பட்டதால் படப்பிடிப்பிற்கு வந்த தனுஷ், தனது வரவை இயக்குனரிடம் கூறுமாறு உதவி இயக்குனரிடம் சொல்லிவிட்டு கேரவனிலேயே காத்திருந்திருக்கிறார்.
மற்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்த பரத்பாலா தனுஷை கண்டுகொள்ளவில்லையாம். நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் மறுபடியும் உதவி இயக்குனரை அழைத்து “ இன்றைய படப்பிடிப்பில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என தயவு செய்து இயக்குனரிடம் கேளுங்கள். இல்லையென்றால் அவரையே நேரடியாக நான் எப்போது வரவேண்டும் எனறு சொல்லச் சொல்லுங்கள்” என கூறிவிட்டு கோவமாக படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாராம்.
இதையறிந்த இயக்குனர் பரத்பாலா ஃபோனில் தனுஷை தொடர்புகொண்டு பேசிய போது “தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன் தான்” என தனுஷ் காட்டமாக பேசியதாக தெரிகிறது. இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் இப்படி ஒரு மோதல் நடந்ததை அறிந்த படக்குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
No comments
Post a Comment