Latest News

March 07, 2012

பற்றைக்குள் பெண் சிசு-காரை நகர்
by admin - 0

காரை நகர் மொந்திபுலத்தில் உள்ள வளவுப் பற்றையிலிருந்து பெண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இச் சம் பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

பற்றைக்குள் குழந்தையைக் கண்ட அயலவர்கள் குழந்தையை காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின் குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
« PREV
NEXT »

No comments