இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பொய்ப் பத்திரம் தயாரித்த இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவந்த இருவர் வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள தமிழர்களை வவுனியா முகாம் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு போலி முத்திரைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்தாகவும் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஆவணங்களைத் தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் மக்களது இருப்பானது தொடர்ந்தும் பாதுகாக்க இவர்கள் எடுக்கும் முயற்சியானது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவே அமைகின்றத என வவுனியா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments
Post a Comment