Latest News

February 27, 2012

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி
by admin - 0

இந்தியாவில் தர்மபுரி மாவட்டத்தில் ஏமகுட்டியூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(35), விவசாய தொழிலாளி ஆவார். இவர் வளர்த்த பசு ஒன்று நேற்று காலை 2 தலையுடன் கூடிய கன்றை ஈன்றடெடுத்து, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
ஆனால், கன்றுக்குட்டி பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துவிட்டது. கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டிக்கு இறுதி சடங்குகளை நடத்தினர்.சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து சடங்குகளை செய்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது, 10 ஆயிரம் கன்றுக் குட்டிகளில் ஒன்று இப்படி அதிசயமாக பிறப்பது உண்டு.



அப்படி பிறக்கும் கன்றுக் குட்டிகள் நீண்டநேரம் உயிருடன் இருக்காது. உடல் ரீதியாக குறைபாடுடன் பிறக்கும் கன்று குட்டிகள் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments