Latest News

February 22, 2012

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! - அனன்யா
by admin - 0


முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா.

சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட 'சித்தப்பு' ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்!

அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு செய்தார்கள். இந்த நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் தெரிய வர, அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கொச்சி அருகில் உள்ள பெரும்பாவூர் போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். ஆனால் அனன்யா வற்புறுத்தலால் புகார் வாபஸ் பெறப்பட்டது.

ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும் ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன் என்று அனன்யா உறுதியாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "என் திருமணம் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கும் ஆஞ்சநேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். இது போன்ற வதந்திகள் எங்கள் காதலை மேலும் வலுவாக்கி விட்டது. அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும்," என்றார்.

ஆஞ்சநேயன் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், "முதல் திருமணம் பற்றி அனன்யாவுக்கு முன்பே தெரியும். ஆஞ்சநேயன் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருந்ததால்தான் அனன்யா தன் முடிவில் தெளிவாக இருக்கிறார்," என்றனர்.
« PREV
NEXT »

No comments