Latest News

February 23, 2012

என்கவுண்டரில் 5 பேரை சுட்டுக்கொன்றது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி விளக்கம்
by admin - 0

சென்னை வேளச்சேரியில் என்கவுண்டரில் 5 பேரை சுட்டுக்கொன்றது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி விளக்கம் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் பதிலுக்கு சுட நேரிட்டது. துப்பாக்கிகள், செல்போன்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், டிரைவர் லைசென்ஸ் கைப்பற்றப்பட்டன. வங்கிக்கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.


வங்கிக்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை, என்கவுன்டராக சென்னை போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. இதுகுறித்து, குற்றவியல் கோர்ட்டிற்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையை குற்றவியல் கோர்ட் மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments