Latest News

January 22, 2012

எங்க அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார் - விஜய் பேட்டி
by admin - 0

நண்பன் படம் வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய விஜய், நண்பன் படம் நல்லா போகுது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் தகவல் வருது. வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் 3 இடியட்ஸ் பார்த்த போது ரொம்ப பிடித்தது. அதனால் அதன் ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி கேரக்டர்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அமைய வேண்டும். நண்பன் படத்தில் அது அமைந்தது. இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனம் இல்லை. பத்து பேரை அடித்து சண்டை போடுவது ஒரு வகை ஹீரோயிசமாக இருந்தாலும் நண்பன் பட கேரக்டர் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது நண்பன் படத்தில் நிறைவேறியது. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பஞ்ச் டையலாக் பேசுவேன்.

நண்பன் படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராக்கிங்குகளில் அவை நடப்பவை தான். படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் எனக்கு நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும். எங்க அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமானத்தில் இருக்கும் என்றார்.
« PREV
NEXT »

No comments