Latest News

January 05, 2012

தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு-தனுஷுக்கு ஆப்பு
by admin - 0

தனுஷின் கொலைவெறி பாடல், சென்ற ஆண்டில் உலகளவில் பிரபலமான பாடல் வரிசையில் இடம்பெற்றது முதல்
இந்தியப் பிரதமரின் தேநீர் விருந்து வரை அவரை அழைத்துச் சென்றுள்ளது. ஏதோ இந்தியத் தேசிய கீதமே இனி இந்தப் பாடல்தான் போன்ற பிரமைகள் கூட ஏற்படுத்தபட்டன. ஆனால் தமிழார்வம் மிக்கப் பலரும் முகஞ்சுழித்து நின்ற போதும், தனுஷின் பிரபலத்தால் மௌனமாகிப் போயினர்.

இதுவரையில் இந்த இசைவடிவத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்து பலரும் பல்வேறு புதிய வடிவங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், யாழ்ப்பாணத்து கலைஞன் ஒருவன் அதே இசைவடியில் இதற்கான தன் எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..
என ஒரு மாற்றுக் குரலாக ஒலிக்கும் அந்தப்பாடலை இங்கே காணலாம்பாடல் வரிகள் மற்றும் இசை: எஸ்.ஜெ. ஸ்டாலின்
படப்பிடிப்பு: வர்ணன்
படத்தொகுப்பு: அமலன்
பாடல் வரிகள் முழுமையாக:
பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…



« PREV
NEXT »

No comments