Latest News

January 19, 2012

ஜெ. அறிவிப்பு ; கருப்பசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ; கருப்புக்கொடி ஏற்றம் - கட்சி கொடி இறக்கம் : பரபரப்பு ( படங்கள் )
by admin - 0

சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த கருப்பசாமி காலமானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையிலும், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.







அண்மையில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக உள்ள எஸ். முத்துச்செல்வி, அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

பி.இ. பட்டதாரியான இவரின் தந்தை எஸ். சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு மறைந்த கருப்பசாமியின் சொந்த கிராமமான புளியம்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



கருப்பசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்கள் கிராமத்தினருக்கு வேட்பாளர் வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தியில் புளியம்பட்டி மக்கள், கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுகவின் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments