வெல்லம்பிட்டிய கிட்டம்பகுவ பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் முச்சக்கர வண்டி ஒன்றினுள் இருந்து இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 61 வயதான கிட்டம்பகுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment