கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் போராட்டம் 29 ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மேற்கண்ட தகவலை செய்தி தொடர்பாளர் பானு ஹோம்ஸ், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சென்னை கிளை ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதத்துக்காக ரஜினிகாந்த் தனது திருமணமண்டபத்தை இலவசமாக அளிப்பதாக அறிவித்தார். பின்னர் இரவில் அங்கு சென்று உண்ணாவிரத ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
அண்மையில் ஹசாரே சென்னை வந்தபோது, ரஜினிகாந்த் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது
No comments
Post a Comment