Latest News

December 13, 2011

சீனாவில் பாடசாலை பஸ் குடைசாய்ந்ததில் 15 மாணவர்கள் பலி
by admin - 0

சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சாக்கடை நீரில் குடைசாய்ந்ததில் சுமார் 15 மாணவர்கள் பலியாகினர். எட்டு மாணவர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஞாயிறன்று பேருந்துகள் அவற்றின் ஓட்டுநர்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரைவை அந்நாட்டரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே இவ்விபத்து திங்களன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலையிலிருந்து குறித்த பஸ்ஸில் 29 மாணவர்கள் ஒரு கிராமப்புற வீதி வழியாக தமது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையிலேயே இத்துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அருகிலுள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மாணவர்களின் அழுகுரல் கேட்டு உதவிக்கு விரைந்தனர். தலைகீழாக கவிழ்ந்திருந்த பஸ்ஸின் கீழே சிக்கிய மாணவர்களை வெளியே இழுத்தெடுத்தனர். இம்மாணவர்கள் சுமார் 6 முதல் 14 வயது வரையானவர்களாவர்.

குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ___
« PREV
NEXT »

No comments