Latest News

November 16, 2011

குழந்தையின் தலையைக் கவ்விச் சென்ற நாய்: லெதன்டின் தோட்டத்தில் பெரும் பரபரப்பு
by admin - 0

பிறந்த குழந்தையின் தலையை நாயொன்று கவ்விச்சென்ற சம்பவமொன்று அட்டன் லெதன்டின் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியில் நாயொன்று சிறு குழந்தையின் தலையைக் காவிக்கொண்டு செல்வதைக் கண்ட பிரதேச மக்கள் அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவலொன்றை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த குழந்தையின் தலைப்பகுதி மற்றும் அதன் உடற் பகுதியை எடுத்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோ தனைக்காக ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்குழந்தை யாருடையது? எவ்வாறு உயிரிழந்துள்ளது? என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments