Latest News

November 06, 2011

மாணிக்க கங்கையை பயன்படுத்துவோர் மிகுந்த விழிப்புடன் இருக்கவும்
by admin - 0

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து செக்கனுக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அமரஜீவ லியனகே தெரிவித்துள்ளார்.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் ஊடாக வெளியேறும் நீர் மாணிக்க கங்கையை சென்றடைகின்றன.

இதனால் மாணிக்க கங்கையை பயன்படுத்துவோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என வெஹெரகல நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments