Latest News

November 05, 2011

2012 முதல் இரண்டாக பிரியும் ஊர்காவற்துறை வைத்திய பிரிவு
by admin - 0

ஊர்காவற்துறையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவானது 2012 ஆம் ஆண்டு முதல் 2 பிரிவுகாளாகப் பிரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தீவுப் பகுதியிலுள்ள நெடுந்தீவு தொடக்கம் வேலனை பிரதேச செயலர், ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அனைத்தும் இணைந்து ஊர்காவற்துறை வைத்திய அதிகாரி பிரிவாக இதுவரை இயங்கி வந்தது. 

போக்குவரத்து, அதிகதூரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதால் இந்த ஊர்காவற்துறை மாவட்ட வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு, ஆகிய இடங்கள் வேலணை மாவட்ட வைத்திய அதிகாரி பிரிவினுள்ளும், அனலைதீவு, எழுவைதீவு, காரைநகர், ஊர்காவற்துறை, ஆகிய பகுதிகள் தற்போது இயங்கிவரும் ஊர்காவற்துறை மாவட்ட வைத்திய அதிகாரி பிரிவினுள்ளும் இயங்கவுள்ளது. 

வேலணைப் பிரிவிற்கான மாவட்ட சுகாதார சுகாதார வைத்திய அதிகாரியினது அலுவலகம் தற்போது தற்காலிகமாக இயங்கிவரும் அரசினர் ஆதார வைத்தியசாலையில் உள்ள கட்டடமொன்றில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது. 
« PREV
NEXT »

No comments