Latest News

September 07, 2011

புது டில்லி நீதிமன்றில் குண்டுவெடிப்பு -11 பேர் பலி; 76 பேர் காயம்
by admin - 0

இன்று காலை 10.17 மணிக்கு புதுதில்லி உயர்நீதிமன்ற ஐந்தாம் வாயிலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. படுகாயடைந்தவர்களில் இதுவரை 50 பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் சில உடல்கள் சம்பவ இடத்தில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முழுமையாக கொமாண்டோ படைகளில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லி முழுவதுமுள்ள வணிக வளாகங்கள், சன நெருக்கடி மிக்க தெருக்களில் இருந்து மக்கள் வெளியேறிதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுட்டுள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாரளுமன்றத்தின் இரு அவைகளில் எதிர்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சூட்கேசில் ஒருந்த குண்டு ஒன்று வெடித்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டத்தரணிகளும்;, நீதிமன்றத்திற்குச் சென்றவர்களும் அங்கிருந்து ஓடினர். பின்னர் சட்டத்தரணிகளே பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக பொலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments