தற்பொழுது இயற்கை விவசாய முறையில் அதிக கவனம் செலுத்தப் படுவதால் ரசாயனமற்ற தாவர வகைப் பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கத்தை குறைக்கலாம்.
* அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியுள்ள தாள்களை சேகரித்து அழிப்பதன் மூலம் குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் மற்றும் நூற்புழுக்களின் முட்டை, புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
* கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூஞ்சாணங்களை வெளிக்கொணர்ந்து சூரிய ஒளி மூலம் அழிக்கலாம்.
* நூற்புழுக்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்றாக தூளாக்கி கடைசி உழவின்போது இடவேண்டும்.
* வரப்புகளைச் செதுக்கி களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் புகையான், இலைமடக்கு புழு, கதிர்நாவாய் பூச்சி ஆகியவற்றின் மாற்று உறைவிடங்களை அழிக்கலாம்.
* மண் பரிசோதனைப்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்து உரத்துடன் வேப்பம்பிண்ணாக்கு சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை பிரித்திடுவது நல்லது.
* நாற்றங்காலில் படைப்புழுக்கள் தென்பட்டால் வயலில் தண்ணீரைத் தேக்கி வைப்பதன் மூலம் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம்.
* கூண்டுப்புழுக்கள் தென்பட்டால் ஒரு கயிறு கொண்டு வரப்பின் இரு புறமும் நின்று பயிரின் மீது படும்படி இழுப்பதன்மூலம் கூண்டுப்புழுக்களை கீழே விழச்செய்து பின் பொதுவான வடிகாலில் வடித்து புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
* நடவின்போது பட்டம் விட்டு நடவு செய்வதன் மூலம் புகையானின் தாக்குதலை குறைக்கலாம்.
* நீர் நிர்வாகத்தில் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும். புகையான் தாக்குதல் இருந்தால் நீரை வடிப்பது அவசியம்.
* வரப்புகளில் தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் இயற்கை எதிரிகளின் நடமாட்டத்தை அதிகப்படுத்தலாம்.
* விளக்குப்பொறியை 1-2மீ உயரத்திற்கு ஒரு எக்டருக்கு 10 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி, கதிர் நாவாய் பூச்சி, இலை மடக்குப்புழு, புகையான் மற்றும் தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாம்.
* இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 12 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
* டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 25, 40 மற்றும் 55ம் நாட்களில் எக்டருக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணி என்ற அளவில் இட்டு குருத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
* இலை சுருட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும் சமயத்தில் முட்செடிகளின் கிளைகளை பயிரின் மீது படும்படி செய்வதன் மூலம் மடங்கியுள்ள இலைகள் கிழிக்கப்பட்டு உள்ளிருக்கும் புழுக்கள் இயற்கை எதிரிகள் தாக்குதலுக்குள்ளாக ஏதுவாக இருக்கும்.
* பயிர் வளர்ச்சிப்பருவத்தின்போது இரண்டு அல்லது மூன்று அடி உயரத்தில் "டி' வடிவ குச்சிகளை வைப்பதால் பறவைகள் நெற்பயிரில் இருக்கும் பழுக்களை உண்டு சேதத்தை குறைக்கும். இரவு நேரத்தில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் நடமாடும் எலிகளை பிடித்து உண்பதால் எலிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம்.
* சிலந்திகள், ஊசித்தட்டான், நீர்த்தாண்டி, நீர் மிதப்பான், இயர்விக், மிரிட் நாவாய்ப்பூச்சி, பொரிவண்டு, தரைவண்டு, கோனியோசில் குளவிகள், டிரைக்கோகிரம்மா குளவி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையிலேயே நெல் வயல்களில் அதிக அளவில் இருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக்கூடாது.
* பொருளாதார சேதநிலையை கணக்கிட்டு தேவை ஏற்படின் தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
* 5 சதம் வேப்பம் பருப்பு கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் 3 சத கரைசலை தெளித்து புகையான், பச்சை தத்துப்பூச்சி, இலை மடக்கு புழு, குருத்துப்புழு, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.
* மேற்கூறிய முறையில் புங்கம் எண்ணெய் 3 சதம், புங்கம் விதைச்சாறு 5 சதம் கரைசலை தெளித்தும் இலைப்பேன் அசுவிணி மற்றும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
* அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியுள்ள தாள்களை சேகரித்து அழிப்பதன் மூலம் குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் மற்றும் நூற்புழுக்களின் முட்டை, புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
* கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூஞ்சாணங்களை வெளிக்கொணர்ந்து சூரிய ஒளி மூலம் அழிக்கலாம்.
* நூற்புழுக்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்றாக தூளாக்கி கடைசி உழவின்போது இடவேண்டும்.
* வரப்புகளைச் செதுக்கி களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் புகையான், இலைமடக்கு புழு, கதிர்நாவாய் பூச்சி ஆகியவற்றின் மாற்று உறைவிடங்களை அழிக்கலாம்.
* மண் பரிசோதனைப்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்து உரத்துடன் வேப்பம்பிண்ணாக்கு சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை பிரித்திடுவது நல்லது.
* நாற்றங்காலில் படைப்புழுக்கள் தென்பட்டால் வயலில் தண்ணீரைத் தேக்கி வைப்பதன் மூலம் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம்.
* கூண்டுப்புழுக்கள் தென்பட்டால் ஒரு கயிறு கொண்டு வரப்பின் இரு புறமும் நின்று பயிரின் மீது படும்படி இழுப்பதன்மூலம் கூண்டுப்புழுக்களை கீழே விழச்செய்து பின் பொதுவான வடிகாலில் வடித்து புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
* நடவின்போது பட்டம் விட்டு நடவு செய்வதன் மூலம் புகையானின் தாக்குதலை குறைக்கலாம்.
* நீர் நிர்வாகத்தில் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும். புகையான் தாக்குதல் இருந்தால் நீரை வடிப்பது அவசியம்.
* வரப்புகளில் தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் இயற்கை எதிரிகளின் நடமாட்டத்தை அதிகப்படுத்தலாம்.
* விளக்குப்பொறியை 1-2மீ உயரத்திற்கு ஒரு எக்டருக்கு 10 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி, கதிர் நாவாய் பூச்சி, இலை மடக்குப்புழு, புகையான் மற்றும் தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாம்.
* இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 12 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
* டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 25, 40 மற்றும் 55ம் நாட்களில் எக்டருக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணி என்ற அளவில் இட்டு குருத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
* இலை சுருட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும் சமயத்தில் முட்செடிகளின் கிளைகளை பயிரின் மீது படும்படி செய்வதன் மூலம் மடங்கியுள்ள இலைகள் கிழிக்கப்பட்டு உள்ளிருக்கும் புழுக்கள் இயற்கை எதிரிகள் தாக்குதலுக்குள்ளாக ஏதுவாக இருக்கும்.
* பயிர் வளர்ச்சிப்பருவத்தின்போது இரண்டு அல்லது மூன்று அடி உயரத்தில் "டி' வடிவ குச்சிகளை வைப்பதால் பறவைகள் நெற்பயிரில் இருக்கும் பழுக்களை உண்டு சேதத்தை குறைக்கும். இரவு நேரத்தில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் நடமாடும் எலிகளை பிடித்து உண்பதால் எலிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம்.
* சிலந்திகள், ஊசித்தட்டான், நீர்த்தாண்டி, நீர் மிதப்பான், இயர்விக், மிரிட் நாவாய்ப்பூச்சி, பொரிவண்டு, தரைவண்டு, கோனியோசில் குளவிகள், டிரைக்கோகிரம்மா குளவி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையிலேயே நெல் வயல்களில் அதிக அளவில் இருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக்கூடாது.
* பொருளாதார சேதநிலையை கணக்கிட்டு தேவை ஏற்படின் தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
* 5 சதம் வேப்பம் பருப்பு கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் 3 சத கரைசலை தெளித்து புகையான், பச்சை தத்துப்பூச்சி, இலை மடக்கு புழு, குருத்துப்புழு, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.
* மேற்கூறிய முறையில் புங்கம் எண்ணெய் 3 சதம், புங்கம் விதைச்சாறு 5 சதம் கரைசலை தெளித்தும் இலைப்பேன் அசுவிணி மற்றும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
No comments
Post a Comment