Latest News

July 16, 2011

யுத்த பூமியில் ஜனாதிபதியின் துணிச்சல் பயணம்
by admin - 0

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் பிரெஞ்சு இராணு வத்தினரிடம் ஒரு மின்னல் விஜயம் ஒன்றைத் திடீரென பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மேற்கொண்டுள்ளார். 5 மணிநேரம் அங்கு பலரையும் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார்.இந்த விஜயம் பாதுகாப்புக் காரணங்களிற்காக மிகவும் இரகசியமாகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

பிரான்ஸ் இந்த ஆப்கான் நடவடிக்கையில் 2001ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை Jaques Chirac காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிக்கோலா சாச்க்கோசி உடனடியாக பிரெஞ்சுப் படைகளின் முண்ணனி நிலைகளான  கிழக்குக் காபூலின் நகரமான Tora நோக்கிச் சென்றார்.

அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி 2012 முடிவிற்குள் ஆப்கானில் நடவடிக்கையிலிருக்கும் படையினரின் கால்வாசிப் பகுதியான 1000 வீரர்களை நாட்டிற்குத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் தொடங்கப்பட்ட போரையும் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் எனவும் கூறினார். முழுமையான பிரெஞ்சுப்படைகளும் 2014 முடிவிற்குள் நாடு திரும்புவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

படையினரைச் சந்தித்த சார்க்கோசி பின்னர் ஆப்கானில் நடவடிக்கையிலீடுபட்டிருக்கும் நேட்டோ படைகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அமெரிக்கத் தளபதி David Petraeus ச் சந்தித்தார். அதன் பின்னர் ஆப்கான் ஜனாதிபதி Hamid Karzaï யையும் சந்தித்தார்.

பிரெஞ்சுப்படைகளின் மீளப்பெறல் கால அட்டவணையை முழுமைப் படுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து மூன்றாவது தடவையாக ஆப்கான் சென்றுள்ளார் பிரெஞ்சு ஜனாதிபதி.

பெருமளவிலான பிரெஞ்சுத் துருப்புக்கள் கிழக்குக் காபூலிலுள்ள Surobi நகரிலே உள்ளனர். 1000 துருப்புக்கள் மீளப் பெறப்பட்டதும் மிகுதித் துருப்புக்கள் Kapisa பிராந்தியத்தில் திரட்டப்படும். இந்தப் பகுதி இன்னமும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுப் பாதுகாக்கப் படவில்லை என Europe 1 வானொலிக்குச் செவ்வியளித்த பிரெஞ்சுப் பிரதமர் François Fillon தெரிவித்திருந்தார். மேலும் 2014 முடிவிற்குள் இராணுவம் திரும்பப் பெறப்பட்டாலும் அதன் பிறகும் அங்கு பாதுகாப்பிலீடுபட இருக்கும் ஆப்கான் படைகளிற்குப் பயிற்சி வழங்குவதற்காக சில இராணுவப்பிரிவுகள் அங்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா ஆப்கானில் நிலைகொண்டிருக்கும் 33,000 படையினரில் மூன்றிலொரு பங்கு இராணுவத்தை அதாவது 10,000 படையினரை 2011 இறுதியில் மீளப் பெறுகின்றது. மிகுதி முழுப்படையினரும் 2012 கடைசிக்கள் மீளப் பெறப் படுவார்கள். அதன் பின்னர் பிரெஞ்சுப் படைகளின் ஆதிக்கமே அங்கு இருக்கும்.

விஜயம் முடித்துத் தனது A330 ல் நாடு திரும்பும் போது ஆப்கானில் படுகாயமுற்ற இரு இராணுவ வீரர்களைத் தன்னோடு ஜனாதிபதி அழைத்து வந்துள்ளார். இந்த இருவரும் 20 வயதுடைய இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் விமானத்தின் amiral Guillaud இரு வீரர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ஒருவர் பெரும் குண்டு வெடிப்பில் சிக்கிப் பல வகையான காயங்களிற்குள்ளாகியிருப்தாகவும் மற்றையவர் ஒரு குண்டு வெடிப்பின் அருகில் இருந்தமையால் அதன் அதியுச்ச சத்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதியின் விமானத்திற்குள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிகிச்சைப் பிரிவில் இவ்விரு வீரர்களும் வலி நிவாரணி (Morphine) வழங்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டனர். ஜனாதிபதியின் விமானத்தில் ஜனாதிபியின் பிரத்தியேக மருத்துவரும் இராணுவ வைத்தியசாலையான Hôpital d'instruction des armées de Percy de Clamart (Hauts-de-Seine) வின் ஒரு பிரிவு அதிகாரியான professeur Bernard Lenoir ம் இருப்பது வழக்கம். இவர்கள் விமானம் Orly விமான நிலையத்தில் தரையிறங்கியதும் உடனடியாக Percy de Clamart இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வுகளிற்கு முன்னர் ஜனாதிபதி Percy de Clamart இராணுவ வைத்தியசாலைக்கு ஆப்கானில் காயமுற்ற வீரர்களைப் பார்வையிட்டார்.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யார் யாருக்கெல்லாம் ஜனாதிபதியின் விமானத்தில் பயணிக்கும் அல்லது ஜனாதிபதியினால் நலம் விசாரிக்கப்படும் அதிஸ்டம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை. தேர்தல் என்பது உலகின் எந்தப் பாகத்தில் நடந்தாலும் அரசியல்வாதிகள் என்னமோ ஒரே மாதிரியாகத் தான் நடந்து கொள்கின்றார்கள்.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments