Latest News

July 21, 2011

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு இளம் விஞ்ஞானி
by admin - 1

தாய்லாந்து நாட்டில் அண்மையில் இடம்பெற்று முடிந்த சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் ஒருவர் வெள்ளிப் பதக்கம் பெற்று உலக சாதனை நடத்தி உள்ளார். இவரின் பெயர் சிவபாலன் செல்வநித்திலன். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயில்பவர்.

80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.

இலங்கை மாணவர் குழுவில் இவர் அங்கம் வகித்தார்.

சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் முதன்முதல் வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையையும் பெற்று உள்ளார்.


« PREV
NEXT »