இவரது பிறந்த நாளை முன்னிட்டு 67 நிமிடங்கள் மக்கள் தன்னார்வ தொண்டு வேலைகளில் ஈடுபட்டனர். இது அவரது 67 ஆண்டு அரசியல் போராட்டத்தை குறிக்கும். மில்லியன் கணக்கில் குழந்தைகள் ஒன்றாக இணைந்து சிறப்பு பாடலை பாடினர்.
இவர் தனது பிறந்தநாளை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு ஹீரோவாக தோன்றினார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் அனைவரும் இன்று பல வித தன்னார்வ திட்டங்களை அறிவித்தனர்.
இதுகுறித்து பான் கூறுகையில்,”நெல்சன் மண்டேலாவின் வழியைப் பின்பற்றி எழுச்சியூட்டும் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
No comments
Post a Comment