Latest News

May 26, 2011

பின்லேடன் கொலையின் பழிவாங்கல் தொடர்கிறது: பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது தற்கொலைத் தாக்குதல் _
by admin - 0

வட மேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இத்தாக்குதலில் அப் பொலிஸ் நிலையத்தின் மூன்று மாடிகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் அங்கு இடம்பெற்ற 4 ஆவது தாக்குதல் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. _










« PREV
NEXT »

No comments