Latest News

March 26, 2020

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்
by admin - 0

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல்!


பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அவர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குறித்த இளைஞர் பிரான்சில் கிறித்தை பகுதியில் வசித்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார். இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.

இவரது பிரிவினால் குடும்பத்தினர் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.
« PREV
NEXT »

No comments