Latest News

November 27, 2018

இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள்!
by admin - 0

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள்!



இல112a The Green, Southall இல் உள்ள Virendra Sharma பாராளமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  காலை 10.00 மணிக்கு  தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

மேற்படி சந்திப்பில் பிரித்தானிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும், இலங்கை சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும், தொடர்ந்து ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற சித்திரவதைகளும் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டது 

மேலும் இச்சந்திப்பில் ஈழத்து கவிஞர் புதுவை இரட்ணதுரை அவர்கள் இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் அவரின் சகோதரர் விமலேந்திரம் அவர்களின் சாட்சியும். கடந்த மாதம் மன்னாரில் வசந்தராஜன் பீரிஸ் அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கு இராணுவ புலனாய்வாளர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாகவும் பாராளமன்ற உறுப்பினர் அவர்களுக்கு சுட்டி காட்டப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளமன்றத்தில் விவாத்த்திற்கு கொணர்வதற்காக பாராளமன்ற உறுப்பினர் Davey, Edward அர்களீர்களின் Early day motion 1480 இற்கு ஆதரவும் வேண்டப்பட்டது 

பாராளமன்ற உறுப்பினர் Virendra Sharma அவர்கள் தனது பூரண ஆதரவினை தருவதாகவும் கதைக்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பில் தமிழ் தகவல் மையத்தின் செயற்பாட்டாளர்களும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான பிரான்சிஸ் வசந்தராஜன்,சிதம்பரநாதன் சைலேசன், 
கந்தசாமி விமலேந்திரம், சுரேஸ், ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments