Latest News

February 15, 2018

தமிழ் மக்களுக்கான அநீதிகளுக்கு கூட்டமைப்பே பொறுப்பு கூறவேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு
by Editor - 0

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனில் சிந்தித்து செயற்படும் ஒரு தலைமை உருவாகும் பட்சத்தில் தமிழ் தேசி யக் கூட்டமைப்புடன் மீண்டும் இணைந்து செயற்படுவது தொடர்பில் தீர்மானம் மேற் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்@ராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமை காரணமாக தமிழ்தேசிய நிலைப் பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கை தொட ர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனுடன் இணைந்து பயணிப்ப தாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை அரசியல் நாகரிகமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.                        
« PREV
NEXT »

No comments