Latest News

January 26, 2018

போராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை!
by admin - 0

போராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை!




நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்­த­னாக இருந்­தா­லும் சரி சுமந்­தி­ர­னாக இருந்­தா­லும் சரி உறுப்­பி­னர்­கள் எல்லோரையும் காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது பிள்­ளை­கள் விவ­கா­ரத்­தில் துரோ­கி­க­ளா­கவே பார்க்­கி­றோம்.

தேர்­தல் விவ­கா­ரத்­தில் எந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாங்­கள் ஆத­ரவு இல்லை. மக்­கள் பிர­தி­நி­தி­கள் இலங்கை அர­சுக்கு வழங்­கிய காலக்கெடு நிறை­வ­டைய ஒரு­வ­ரு­டமே உள்­ளது. அதற்­குள் எமக்­கான தீர்வை உல­க­ நா­டு­கள் பெற்­றுத்­த­ர வேண்டும்.
கடத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­ட­றிந்து தரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள உற­வு­க­ளு­டைய போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. தொடர்­பாக கருத்து தெரி­வித்த காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை தேடிக் கண்­ட­றி­யும் சங்­கத்­தின் தலைவி காசிப்­பிள்ளை ஜெய­வ­னிதா இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:


வவு­னியா மாவட்­டத்­தில் தொடர்ச்­சி­யாக 335ஆவது நாளா­க­வும் சுழற்சி முறை­யி­லான உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கி­றோம். எமது பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது, பதில் கூறு என அர­சுக்கு கோரிக்கை விடுத்து 14 தாய்­மார்­க­ளு­டன் கடந்த வரு­டம் தை மாத­ம் 23ஆம் திகதி அன்று சாகும் ­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தோம்.


அதன் ஒரு­வ­ருட முழு­மையை நினைவு கூரு­மு­க­மா­கவே கடந்த செவ்­வாய்­கி­ழமை கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டு­டி­ருந்­தோம். இருந்­த­போ­தும் எமது பிள்­ளை­கள் குறித்து விரை­வில் பதில் தரு­வ­தாக கூறி எமது உணவு ஒறுப்­புப்­ போ­ராட்­டத்தை நிறுத்­திய அரசு தீர்வு எத­னை­யும் தர­வில்லை.
தற்­போது ஐந்து மாவட்­டங்­க­ளில் காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்­கா­கப் போராட்­டம் மேற்­கொண்டு வரு­கி­றோம். தொடர்ந்து கொண்­டி­ருக்­கும் எமது போராட்­டத்­துக்கு உலக நாடு­க­ளான அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­கள் தீர்­வு­களை பெற்­றுத் தரும் என்ற நம்­பிக்­கை­யில் இருக்­கின்­றோம்.
எங்­கள் பிள்­ளை­கள் தொடர்­பாக பன்­னா­டு­க­ளும் தலை­யிட்டு பதில் கூறும் என்ற நம்­பிக்­கை­யில் தொடர்ச்­சி­யான போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம்.
இலங்கை அரசு எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பதி­லை­யும் வழங்­காத நிலை­யில் உல­க­நா­டு­க­ளின் பிர­தி­நி­தி­கள் எங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­யின் பய­னாக நிச்­ச­மாக எங்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கும்.
போராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை. கார­ணம் எமது தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் இலங்கை அர­சுக்கு இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கி­யுள்­ள­னர்.
ஒரு வரு­டம் நிறைவு பெற்­றுள்­ளது. இப்­போது எமது மக்­கள் பிர­தி­நி­தி­கள் தேர்­த­லில் ஈடு­பட்­டுள்­ளார்­கள். அர­சி­யல் சம்­பந்­த­மாக நாங்­கள் யாருக்­கும் சார்­பாக செயற்­ப­ட­மாட்­டோம். கார­ணம் நாங்­கள் அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் முழு­மை­யாக எதிர்த்­துத்­தான் தனித்­து­வ­மாக இந்­தப் போராட்­டத்தை நடத்­தி­வ­ரு­கி­றோம் -என்­றார்.
« PREV
NEXT »

No comments