யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மாணவி வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கின் இறுதித்தீர்ப்புத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment