Latest News

April 21, 2017

இழுத்­த­டிக்­கப்­படும் காணி விடு­விப்பு விவ­காரம்
by admin - 0

கேப்­பாப்­பு­லவு மக்கள் இரா­ணு­வத்­தி­ட­மி­ருக்­கின்ற தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டத்தை நடத்தி வரு­கின்­றனர். நேற்று முன்­தினம் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இரா­ணுவத் தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்று நடை­பெற்­றது. முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்தில் மாவட்ட அர­சாங்க அதிபர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் படைத்­த­ரப்பின் சார்பில் முல்­லைத்­தீவு மாவட்ட கட்­டளைத் தள­ப­தியும் கடற்­படை மற்றும் விமா­னப்­படை அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இதன்­போது படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணி­களின் அளவு தொடர்­பா­கவும் அவற்றில் தற்­போ­தைக்கு விடு­விக்­கப்­ப­டக்­கூ­டிய பொது­மக்­களின் காணிகள் தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றதன் பின்னர் கேப்­பாப்­பு­ல­வி­லுள்ள இரா­ணுவ முகா­முக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இரா­ணுவ அதி­கா­ரிகள் சகிதம் விஜ­யம்­செய்து காணிகள் தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்­தனர். அது­மட்­டு­மின்றி, காணி மீட்பு தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கேப்­­பா­ப்பு­லவு பூர்­வீக கிராம மக்­க­ளையும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த முல்­லைத்­தீவு இரா­ணுவ கட்­டளைத் தலை­மைத்­துவம் முல்­லைத்­தீவு கேப்­பாப்­பு­லவு மக்­க­ளு­டைய காணி­களை பூர­ண­மாக வழங்­க­மு­டி­யாது என்றும் 55 குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை வேண்­டு­மானால் வழங்க முடி­யு­மென்றும் தெரி­வித்­தி­ருந்­தது. அத்­துடன் எஞ்­சி­யுள்ள 65 குடும்­பங்­களின் காணி­களை வழங்க முடி­யாது என்றும் அவர்­க­ளுக்கு மாற்றுக் காணிகள் அல்­லது நட்­ட­ஈடு வழங்­கலாம் என்றும் முல்­லைத்­தீவு இரா­ணுவ தலை­மை­யக அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதே­வேளை நேற்­றைய தினம் இந்தச் சந்­திப்­பின்­போது கருத்து வெளி­யிட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் கேப்­பாப்­பு­லவு மக்­களின் பூர்­வீக நிலங்­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணுவத் தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி எந்தப் பயனும் இல்லை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மாற்றுக் காணி­களை பெறப்­போ­வ­தில்லை என்று பொது­மக்கள் உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளனர். மக்­களின் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாம் இரா­ணுவ முகாம் உள்ளே சென்று மக்­களின் காணி­களை அடை­யாளம் காணும் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தோம். தென்மேற்கு பக்­க­மாக இருக்கும் 111 ஏக்கர் காணி­களை விடு­விக்க இரா­ணுவம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அதைப்­போன்று இரா­ணுவ முகா­முக்கு உள்ளே உள்ள வீதியும் திறக்­கப்­படும் என்றும் எம்.ஏ. சுமந்­திரன் இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

எனினும் அவர்கள் பேச்­ச­ளவில் அவ்­வாறு கூறி­னாலும் நிலைமை அதற்கு மாறா­கவே உள்­ளது. நிரந்­தரக் கட்­ட­டங்­களை அமைத்து இவற்றை நீண்­ட­கால இரா­ணுவ முகா­மாக பயன்­ப­டுத்த திட்­டங்­களைக் கொண்­டுள்­ளனர் என்று தோன்­று­கி­றது. நாங்கள் இதனை நேர­டி­யாக சென்று பார்த்­தமை எமக்கு உத­வி­யாக அமைந்­துள்­ளது. அடுத்த தடவை ஜனா­தி­பதி மற்றும் உயர் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தும்­போது இந்த விட­யங்­களை முன்­வைப்போம் என்றும் இரா­ணுவ முகாமுக்கு சென்று மக்­களின் காணி­களை பார்­வை­யிட்ட பின்னர் எம்.ஏ. சுமந்­திரன் கூறி­யுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க கேப்­பாப்­பு­லவில் ஒரு பகுதி காணி­களை விடு­விப்­ப­தாக இரா­ணு­வத்­தினர் கூறி­யுள்ள நிலையில் அதனை நிரா­க­ரிப்­ப­தாக போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தெரி­வித்­துள்­ளனர். எமது காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­படும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை. இந்த முடிவில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். எமது போராட்­டத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம் என்றும் கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளனர். அந்­த­வ­கையில் கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்­களின் காணி­களை விடு­விக்கும் நோக்கில் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி முழு­மை­யான வெற்­றியைத் தரா­ம­லேயே முடி­வ­டைந்­துள்­ளது என்று கூற­வேண்டும்.

பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்­பாக கடந்த திங்­கட்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் தலை­மை­யி­லான அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போதே கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்­களின் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள காணி­களை நேரில் சென்று பார்­வை­யி­டு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. அந்தத் தீர்­மா­னத்­துக்கு அமை­வா­கவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இரா­ணுவ அதி­கா­ரிகள் சகிதம் நேற்று முன்­தினம் கேப்­பாப்­பு­லவில் அமைந்­துள்ள இரா­ணு­வ ­மு­கா­முக்கு விஜயம் செய்­தனர்.

 இதன்­போது ஒரு பகுதி காணி­களை விடு­விப்­ப­தற்கு இரா­ணுவம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­போ­திலும் அதனை ஏற்­ப­தற்கு மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். தமது முழு­மை­யான காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென மக்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். ஆனால் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் முழு­மை­யான அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. மாறாக காணிகள் விடு­விப்பு விவ­கா­ரத்தில் இழுத்­த­டிக்கும் வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வ­தாக கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் விளை­வாக இந்தக் காணிகள் பார்­வை­யி­டப்­பட்­டாலும் இன்னும் முழு­மை­யான தீர்வு கிடைக்­கா­ம­லேயே உள்­ளது.

 பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் தமது சொந்தக் காணி­க­ளையே மீள் வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி போராடி வரு­கின்­றனர். மாறாக பொது­மக்கள் அர­சாங்­கத்தின் காணி­களை கோர­வில்லை என்­பதை அனைத்து தரப்­பி­னரும் மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பல்­வேறு இழப்­பு­களைச் சந்­தித்த பின்னர் பாரிய வேத­னை­யு­டனும் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலும் வாழ்ந்து வரு­கின்­றனர். எனவே அவர்­களின் காணி­களை விடு­விக்­காமல் அர­சாங்கம் செயற்­ப­டு­வ­தா­னது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­ய­ாத­தாகும். இந்த விட­யத்தில் உட­னடி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களின் காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் மக்கள் எதிர்­பார்த்­ததைப் போன்று காணி­களை விடு­விக்கும் செயற்­பா­டுகள் வேக­மா­கவும் அர்ப்­ப­ணிப்­பா­கவும் இடம்­பெ­ற­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்­ததும் ஆரம்­ப­கட்­ட­மாக ஒரு குறிப்­பிட்ட தொகை காணிகள் வடக்கில் விடு­விக்­கப்­பட்­டன. தொடர்ந்து அந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் அவ்­வாறு செயற்­பா­டுகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக இந்த விட­யத்தில் தொடர்ந்து இழுத்­த­டிப்­பு­களே இடம்­பெற்று வரு­கின்­றன. பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஆரா­யும்­நோக்கில் ஜனா­தி­பதி விசேட செய­லணி ஒன்­றையும் நிய­மித்­தி­ருந்தார். ஆனால் அந்த செய­லணி நிய­மிக்­கப்­பட்டும் கூட மக்­களின் காணிகள் விடு­விப்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாடிக்கொண்டிருக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அவ்வாறு அந்த மக்களை பார்வையிட்ட ஜனாதிபதி அந்த மக்களின் அவலங்கள் தொடர்பாக பொது மேடைகளிலும் உரையாற்றியிருந்தார். இவ்வாறான நிலைமையிலும் அபகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றமையானது கவலைக்குரிய விடயமாகும்.

 இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காணிகளை இழந்து பல்வேறு அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலைமை தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். குறிப்பாக கேப்பாப்புலவு உள்ளிட்ட காணிகளைக் கோரி போராட்டங்களை நடத்திவரும் மக்களின் நிலைமை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
« PREV
NEXT »

No comments