Latest News

April 08, 2017

இராணுவம் வெளியேறினாலேயே மீள்குடியேற்றம் சாத்தியப்படும்
by admin - 0

வடக்கு மாகா­ணத்தில் மக்­க­ளு­டைய காணி­களில் இருந்து இரா­ணுவம் வெளி­யே­றினால் தான் மீள் குடி­யேற்றம் சாத்­தி­யப்­படும். அவ்­வாறு இல்­லாது விட்டால் மக்­களின் அகதி வாழ்­வுக்கு முடிவு வராது என்று ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லய பணிப்­பாளர் டெய்ஜி டெலிடம் தெரி­வித்­துள்­ள­தாக வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயப் பணிப்­பாளர் டெய்ஜி டெல், வட­ப­கு­திக்­கான விஜயம் மேற்­கொண்டு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை கைத­டி­யி­லுள்ள அலு­வ­ல­கத்தில் நேற்று சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.

cv 


இச்­சந்­திப்புத் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் முத­ல­மைச்சர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 'அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­லயப் பணிப்­பாளர் மற்றும் அவ­ரது குழு­வினர், அக­திகள் குறித்து ஆராய்­வ­தற்கு இங்கு வருகை தந்­தி­ருந்­தனர். வடக்கு மாகா­ணத்தில் அக­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்ற மக்கள் தொடர்­பாக என்­னிடம் கேட்­டார்கள். 

இது தொடர்பில் அவர்­க­ளிடம் நான் குறிப்­பி­டு­கையில் வடக்கு மாகா­ணத்தில் மக்­க­ளு­டைய காணி­களில் இருந்து இரா­ணுவம் வெளி­யே­றி­னால்தான் மீள் குடி­யேற்றம் சாத்­தி­யப்­படும் அவ்­வாறு இல்­லாது விட்டால் மக்­களின் அகதி வாழ்­வுக்கு முடிவு வராது. இரா­ணு­வத்­தினர் மக்­க­ளு­டைய காணி­களில் தொடர்ந்தும் இருப்­ப­தனால் மக்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களைச் சந்­திக்­கின்­றார்கள். இதன் கார­ண­மாக மக்கள் தொடர்ந்தும் அக­தி­க­ளாக முகாம்­க­ளிலும் பொது மக்கள் வீடு­க­ளிலும் பல பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

வட­மா­கா­ணத்தில் இரா­ணுவம், மக்­களின் காணி­களை விட்டுச் சென்றால் மாத்­தி­ரமே, மக்கள் தமது காணி­க­ளுக்குச் செல்லும் நிலை ஏற்­படும் என சுட்­டிக்­காட்­டினேன். மேலும், யுத்தம் கார­ண­மாக இலங்­கையில் இருந்து இந்­தி­யா­விற்குச் சென்ற மக்கள் தற்­போது அங்­கி­ருந்து மீண்டும் வருகை தந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வாறு திரும்பி வரு­வதை நாங்கள் வர­வேற்­கின்றோம்.

ஆனால், அவர்­க­ளுக்­கு­ரிய வாழ்­வா­தா­ரங்­க­ளையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வேண்டும். அவ்­வாறு நாட்­டுக்குத் திரும்பி வரும்­போது, அவர்­களின் காணிகள் காணி­க­ளுக்கு சொந்­த­மல்­லா­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலைமை காணப்­ப­டு­கி­றது. இதனால் பலத்த சவால்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளு­க­ளையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதற்கு உடனடித்தீர்வு காணப்படவேண்டும். 

மேலும் எமது நாட்டில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது பற்றி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவதானிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.

« PREV
NEXT »

No comments