கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்கான தொடர் போராட்டத்தினை கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாம் அருகே இன்று ஆரம்பித்து தொடர்கின்றனர்.
தமது பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர்கள் நிலங்கள் மீட்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 225 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்து வைத்துள்ளதாகவும் அவற்றை மீட்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எமது சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்துள்ள மக்கள் பிரதாக இராணுவ முகாம் வாயில் அருகே தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment