இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து இன்று ஒன்பதாவது நாளாக போராடிவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உரியவர்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களென அனைவரும் தமது சொந்த நிலத்தை கேட்டு இன்று ஒன்பது நாட்களாக போராடிவருகின்றனர்.
No comments
Post a Comment