Latest News

February 08, 2017

பன்னீர் செல்வத்தின் கட்சியின் அடிப்படை உறுப்புரிமை நீக்கப்படும் என அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வீ.கே.சசிக்கலா
by admin - 0

 

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சியின் அடிப்படை உறுப்புரிமை நீக்கப்படும் என அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வீ.கே.சசிக்கலா தெரிவித்துள்ளார்.

போயஸ் தோட்டத்தில் அ.தி.மு.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசிக்கலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. 

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையின் பின்னணியில் தி.மு.க கட்சியியே இருக்கின்றது. இதேவேளை, ஓ.பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று இரவு 9 மணியளவில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments