Latest News

January 14, 2017

இயக்குனர் கௌதமன் மீதான தாக்குதல் இந்திய அரசு தமிழருக்கு விட்ட எச்சரிக்கை
by admin - 0

இயக்குனர் கௌதமன் மீதான தாக்குதல் 

இந்திய அரசு தமிழருக்கு விட்ட எச்சரிக்கை.!
 
ஏறுதழுவுதலை அனுமதிக்கக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இயக்குனர் கௌதமன் மீது தமிழக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். 

1970களில் தமிழர் மீதான அடக்குமுறையை சிங்கள தேசம் இப்படித்தான் கையாண்டது. அதுவே நாளடைவில் ஆயுதப்போராட்டமாக பரிமாணம் பெற்றது. 

இன்று இந்திய அரசும் அதே தவரையே செய்கின்றது. இந்த அடக்குமுறை தொடர்ந்தாள், சிங்கள அரசு என்ன பாடத்தை,  தமிழரிடமிருந்து கற்றதோ அதே பாடத்தை இந்திய அரசும் கற்க வேண்டி வரும் என்பதை மறுக்க முடியாது.! 

இந்திய அரசு ஒரே மொழி ஒரே மதம் என்ற அடிப்படை கொள்கையை வகுத்தே இன்று காய்கள் நகர்த்தப்படுகின்றது. இதைத் தமிழர்கள் நன்கு உணர வேண்டும்.! 

இந்திய அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் தேசிய இனங்களின் பண்பாடுகளை முதலில் அழித்து, பின்னர் மொழியை திணிக்க ஆரம்பிப்பார்கள்.! 

அதன் ஆரம்பம் தான் ஜல்லிக்கட்டு மீதான தடை.! இது தொடரும்.! 
 
தமிழருக்கு வரலாற்றுக்கடமை அழைக்கின்றது. நீங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இல்லாது போனால், நீங்கள் இருக்கும் தடம் காணாமல் போகும். தமிழர் மற்றைய இனங்களில் இருந்து மாறுபட்டவன். 

இந்த தாக்குதல் எல்லோருக்குள்ளும் ஒரு கோபத்தை உண்டுபண்ணும் என்பதில் மாற்றம் இல்லை. இது மீண்டும் தொடர்ந்தால், இந்த கோபத்தின் நெருப்பு ஹிந்தியை பெரும் தேசத்தையே சுட்டெரிக்கும். 

இன்று ஒரு கொதி நிலையில், இவர்களுடன் சேர்வதற்கு பல "சேகுவராக்கள்" காத்திருக்கின்றனர். 

தமிழர்களை வஞ்சகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். 
லத்திகள் கொண்டு அடக்க நினைத்தால், அவர்களே அதில் அழிவது திண்ணம்.! 

தமிழன் அடங்கிப்போகும் ஒரு இனம் அல்ல. அடக்கி ஆண்ட இனம்.!
சினத்துடன் துரோணர்.!
« PREV
NEXT »

No comments