அல்வாய் கிழக்கு பத்தானையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தங்கவடிவேலு அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
பெரியதம்பியின் திருமணம் வரை இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
அள்ளி அணைத்து நாம் அர்த்தம் தான் என்ன சொல்ல?
ஆயிரம் பொய் சொல்லி ஆறுதல் நான் சொன்னாலும்
ஆறிறுமா எந்தன் மனம் உங்களை நினைக்கையிலே
பேரப்பிள்ளைகளின் செயல்களிலே மனம் உன்னைத் தினம்
காணும் போதெல்லாம் கண்ணீர்தான் கரைந்தோடும்
வாழும் நாள் வரைக்கும் உன்னை நினைத்திருப்போம்
நினைவுகளோடு நாம் நிறைவாக வாழ்ந்திடுவோம்
எத்தனை ஆண்டுகள்ஆனாலும் அன்பு கொண்ட உன் பாசம்
அருகில் இருப்பது போல் உணருவோம்
அன்பால் என்றும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
குடும்பத்தினர்
உற்றார் உறவினர் நண்பர்கள்
No comments
Post a Comment