Latest News

January 07, 2017

விலகல் கடிதம் கொடுத்த பன்னீர்
by admin - 0

 
சசிகலாவின் பாராமுகமும் தினகரன் பேசிய பேச்சும் முதலமைச்சர் பன்னீரைத் தூங்கவிடவில்லை. அதையடுத்து தனக்கு நெருக்கமான ஜோதிடர்கள், நண்பர்களிடம் தன் நிலையைச் சொன்னார். 

அதற்கு அவர்கள், "அவர்களோடு (சசிகலா தரப்போடு) மல்லுக்கட்ட வேண்டாம். இன்னும் நாலரை வருஷத்துக்கு ஆட்சி இருக்குது. மத்திய அரசை நம்பி, நீங்க முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா முதலமைச்சர் பதவியிலிருந்து உங்களை தூக்கியெறிவாங்க. உங்க அரசியல் எதிர்காலத்தை நினைச்சி, ஜெயலலிதா கொடுத்த நெம்பர் டூ இடத்தை இவங்ககிட்டயும் நிலை நிறுத்திக்கப் பாருங்க'' என அறிவுரை கூறியிருக்கிறார்கள். 


இந்த நிலையில், "பன்னீரின் பதவியை குறி வைத்து, வெளிப்படையாக அறிக்கை வாசியுங்கள்' என தம்பிதுரைக்கு சசிகலா உத்தரவு போட்டதால்தான் தனது துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே, "கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒருவரிடத்திலேயே இருக்க வேண்டும்' என சுட்டிக்காட்டி அறிக்கை வாசித்தார் தம்பிதுரை. இந்த நிலையில், கார்டனுக்கு வரவழைக்கப்பட்ட ஒ.பி.எஸ்.சிடம், ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. 

மேலும் தினமும் கார்டனுக்கு வந்துட்டுத்தான் கோட்டைக் குப் போகணும் என பன்னீருக்கு உத்தரவிடப்பட்டி ருக்கிறது. கார்டனிலிருந்து கோட்டைக்கு வந்ததும், கடிதம் எழுதி வாங்கப்பட்டதை டெல்லிக்கு தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
« PREV
NEXT »

No comments