Latest News

November 07, 2016

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் வீரவணக்க நிகழ்வு
by admin - 0

வீரவணக்க நிகழ்வு
 

02.11.2007 அன்று கிளிநொச்சி மாவட்ட சமாதான செயலகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களினதும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், மேஜர் நல்லதம்பி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய வீரவணக்க நிகழ்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை Ealing Methodist Church, Ealing Road, Wembley என்னும் இடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலியை தெரிவித்தனர்.


வீரவணக்கம். 
×××××××××××



கடந்தன ஒன்பது ஆண்டுகள்- இன்று

கண்ணுக்குள் மணிகளாய் ஆயினரே.

வான் பரப்பில் வந்த பருந்து- வன்னி 

பார் தனிலே போட்டது குண்டு.



தமிழ்ச்செல்வன் அண்ணாவோடு-வேங்கைகள் தரணியில் சாய்ந்தனரே..

தாயக விடுதலைக்காய் ஏழு மறவர்கள்!


தியாக வேள்வியில் சங்கமமானாலும்.


தீராது உங்களது இலட்சியப் பயணம்...


சிங்கள அரசே உனக்கு தீ மூட்ட வருவார்கள் 
தாயகச் செல்வங்கள் தமிழ்ச்செல்வன் வடிவிலே. 




உன் கோட்டைகள் அனைத்தும் கோலமிளக்கும். 
சாட்டை அடிபோல் சர மாரி பொளியும். 



பிரபாகரன் படையணி பிறந்து எழும்.
பிடரியில் அடி விழும்போது பிணமாய் வீழ்வாய். 



தமிழர் கொடி தரணியில் பறக்கும். 
தரம் கெட்ட சிங்களம் தவிடு பொடியாகும், தவிடு பொடியாகும். 



நன்றியுடன்...........
ஜெகநாதன்.

 

 
 
 
 
« PREV
NEXT »

No comments