யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இதனையொட்டி வியாபார நடவடிக்கைகளில் பலரும் ஈடுபட்டுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள குருக்கள்மட பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக சிறுமிகள் இருவர் கற்பூர விற்பனையில் ஈடுபட்டு வருவதனைக் காணக் கூடியதாக உள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர், மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.
படிக்க வேண்டிய வயதில் கற்பூர விற்பனையில் இந்தப் பிஞ்சுகளை விட்டது யார்? இது ஒரு சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாகும்.
ஒரு வேளை பணம் கறக்கும் பெரும் மாபியாக் கும்பல் கூட இதன் பின்னால் இருக்கலாம். இல்லாவிடில் இவர்களின் வாழ்வாதாரத்திற்காக இதை செய்யலாம் ஆகவே இதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையால் இச்சிறுவர்கள் வேலை செய்வார்களாயின் அவர்களின் வாழ்வாதாரம் செழிக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
No comments
Post a Comment