சுவீஸ் நாட்டில் உடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்)போட்டியில் கலக்கும் ஈழச்சிறுமி தவச்செல்வா தமிழ்விழி
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்துவரும் ஈழத்தமிழர்கள் தமது பல்வகை திறமைகளை வெளிப்படுத்திவருகின்றர்கள் அந்தவகையில் கடந்த 30 வருடங்கள் கொண்ட குறுகிய காலத்தில் , ,கல்வி ,விளையாட்டு வியபாரம் ,கலை போன்ற பலவகை துறைகளில் ஏனைய இனத்தவர்களைவிட தமது திறமைகள் மூலம் ஈழத்தமிழினம் தடம்பதித்து வருகின்றது , குறிப்பாக இரண்டாவது தலைமுறைப்பிள்ளைகள் தாம் வாழும் நாட்டவர்கள் வியர்க்கும் வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்திவருகின்றர்கள் , தற்போது செங்காளன் மாநிலத்தில் வீல் நகரில் வாசித்துவரும் தவச்செல்வா தமிழ்விழி என்ற சிறுமி (வயது 8)ஜிம்னாஸ்டிக்விளையாட்டில் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளார்.
இவரின் திறமையை அறித்த சுவீஸ் ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்தி வெளியீட்டுள்ளது .
செங்காளன் மாநிலத்தில் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றிபெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அத்துடன் மாநிலங்களுக்கிடையிலான போட்டிகள் சில தினங்களில் ஜெனிவா மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் தவச்செல்வா தமிழ்விழி தெரிவுசெய்யப்படுள்ளார்.
அத்துடன் ஈழத்து சேர்ந்த தம்பதிகளின் மகள் என்பதும் இப்போட்டியில் பங்குபெற்றும் ஒரே வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடதக்கது , யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிராமத்தை சேர்ந்த திரு -திருமதி சுஜித்தா & தவச்செல்வா தம்பதிகளின் மகள் தமிழ்விழி எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டிக்கும் ஈழத்தமிழர்களும் பெருமையை தேடித்தருவர் என்பது குறிப்பிடத்தக்கது .
1 comment
வாழ்த்துக்கள்
Post a Comment