Latest News

October 01, 2016

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் உடலத்திற்கு பலநூற்றுக்கணக்காண மக்கள் அஞ்சலி
by admin - 0

இன்று காலை மாரடைப்பால் இறைபதமடைந்த வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் அன்ரனிஜெகநாதனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இன்றுமாலை 5.30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இன்றய தினம் இவரது உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் க.சிவநேசன் லிங்கநாதன் இந்திரராசா ஜெனோபர் மற்றும் பலநூற்றுக்கணக்காண மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

 

 

 


« PREV
NEXT »

No comments