Latest News

September 08, 2016

பாடசாலைக்கு தங்கள் காணிகளை வழங்கிய சகோதரர்கள்
by admin - 0

வேலணை பிரதேசத்தின் வித்துக்களை முத்துக்களாக்குகின்ற வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்திற்கு Dr.திரு.க.நவரத்தினம் (நடனமுருகன்  வைத்தியநிலையம்)  Dr.திரு.க.சோதிதாஸன் (முருகானந்தா வைத்தியநிலையம், எழுத்தாளர், கவிஞர் வேலணையூர் தாஸ்) ஆகிய இரு சகோதரர்களும் தமது பெயரில் உள்ள சொந்த காணியினை எமது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளர்.

இவர்கள் வாழ்வு ஐயப்பன், முருகன் அருளால் நீடூளி வாழ்கவேண்டும் என வேண்டிக்கொண்டு, இவர்களை வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையம், துறையூர் ஐயனார் கலாமன்றம், துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழகம், துறையூர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஐயனார் ஆலயம், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம், வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் மற்றும் பல பொது அமைப்புக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.  மேலும் இவர்களது சேவை எமது கிராமத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் என்றும் துணைநிற்கவேண்டும் என வேண்டி வாழ்த்துகின்றோம்.



« PREV
NEXT »

No comments