எழுக தமிழ்! எங்கள் தமிழ்!! பொங்கு தமிழ்!!!
எங்கள் உயிர்க்கு மேலான தமிழ்
தமிழர் தாயகத்தை வலியுறுத்தும் தமிழ்
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த தமிழ்
தமிழர் தாயகத்தில் தமிழர்க்கு உரிமை இல்லையா?
தமிழர் தாயகமெல்லாம் பௌத்த சிங்கள மயமா?
தமிழன் எப்போதும் சிங்களனின் சிறைக் கைதியா?
தமிழர் வாழ்வும் வளமும் சீரழிய அனுமதிப்பதா?
தமிழா.....!
விடுதலைக்காய் விதையாகிப் போன - எங்கள்
வீரமறவர்களின் கனவுதனை மறந்து விட்டாயா
வீணர் கதை கூறி கூனிக்குறுகி மண்டியிட்டு
வீணாய்ப் போவதுதான் உனது வாழ்க்கையா
தமிழா....! நீ.... வீரனெடா....!
வீறுகொண்டெழுந்து போர் புரிந்த
விடுதலை வீரன் பிரபாகரன் - எங்கள்
வீரத் தலைவனெடா....... தமிழா.....
அவனே எங்கள் உண்மைத் தலைவனெடா...!!!
தமிழர் விடுதலைக்காய்
இரத்தம் சிந்தி வயர்வை சிந்தி
உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்த
உன்னத மாவீரர் தியாகங்களையும்
உண்மையான போராளிகளின் - மேலான
உழைப்பையும் மறந்து விட்டுவிடலாமா
எழுக தமிழா...!!!
உனது விலங்கொடிக்க
உனது கரங்கள்தான் உழைக்க வேண்டும்
தமிழா நீ இன்று
ஊமையாய் உறைந்திருந்தால்
நாளை உனது உரிமைகள்
அனைத்துமே பறிபோய் விடும்
உனது உரிமைக்காய் நீதான் போராட வேண்டும்
உனது இருப்புக்காய் நீதான் உழைக்க வேண்டும்
உனது விடுதலைக்காய் ஒற்றுமையாய்
எழுக தமிழா! எழுக தமிழா! எழுக தமிழா!
No comments
Post a Comment