Latest News

September 14, 2016

தமிழர் தாக்கப்படுவதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
by admin - 0

தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாக கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது.
அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுகின்றது.

தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், இந்திய மத்திய அரசு விரைந்து தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்திடக்  நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும்  இவ்  கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது.
« PREV
NEXT »

No comments