Latest News

September 15, 2016

தமிழா அழிவுகளும் அவமானங்களும் தொடர வேண்டுமா???
by admin - 0

அற்ப சொற்ப சலுகைகளுக்காய்
தமிழர்களை அடகு வைத்து
உல்லாசம் அனுபவிப்பவர்கள்
இருக்கும் வரை...!!!
தமிழ் மக்களை மடையர்களாய்
நினைத்த மதி கெட்ட கூட்டம்
இருக்கும் வரை...!!!
தன் சுயநலத்திற்காய்
தன்மானத்தை அடகு வைத்தவர்கள்
எம் இனத்தில்
இருக்கும் வரை...!!!
விடுதலைக்காய் வித்தாகிப் போன
வீர மறவர் தியாகங்களை
விலை பேசுபவர்கள்
இருக்கும் வரை...!!!
தமிழன் விலங்கொடிக்க
தம்மையே அர்ப்பணித்த
விடுதலை வீரர்களை வீணர்கள்
என்று ஊழையிடும் நரிக் கூட்டம்
இருக்கும் வரை...!!!
தமிழின அழிப்பை இல்லையென
வாய்கூசாமல் வாதம் புரிந்து
வாலாட்டி வாழும் கூட்டம்
இருக்கும் வரை...!!!
உண்மையான தமிழ் உணர்வுடன்
உண்மையான விடுதலைக்காய்
உண்மையாக நடப்பவர்களை
கொச்சைப் படுத்திக் கொண்றொழிக்க
முயலும் வேசம் போட்ட
பொய்யர் கூட்டம்
இருக்கும் வரை...!!!
தன்னினத்தின் இருப்பை மறந்து
தன்னினத்தின் தவிப்பை மறந்து
தன்னினத்தின் அவலத்தை மறந்து
தன்னலத்துடன் அலையும் கூட்டம்
இருக்கும் வரை...!!!
..........................
தமிழனது வாழ்வில்
அழிவுகளும் அவமானங்களும்தான்
தொடரும்...!!!
இந்நிலை மாற வேண்டும்...!!!
இவ்விழி நிலையை மாற்ற வேண்டும்...!!!
இதற்கு இனியும் இடமளிக்கக் கூடாது...!!!
தமிழா................!!!
இனியும் அழிவுகளும் அவமானங்களும்
தொடர வேண்டுமா???

-சி.சிவேந்தன்-
« PREV
NEXT »

No comments