Latest News

August 29, 2016

உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்திய தலித் ஏழை குடும்பத்தை பராமரிக்க போவதாக பஹ்ரைன் பிரதமர் அறிவிப்பு.....! விபரம்...
by admin - 0

இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி இறந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல பொருளாதாரமின்றி யாரும் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாததால் இறந்த மனையின் உடலை 10 கிமீ தூரம் தூக்கி சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலித் என்பதால் தீண்டாமையின் காரணத்தினாலும், பொருளாதாரம் இல்லாத காரணத்தினாலும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருந்தாலும் இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழையின் கண்ணீரை துடைப்பதற்கு கூட முன்வராத சூழலில்....

அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் பின் அல் கலிபா அவர்கள் இந்த ஏழைக்கு நான் இருக்கிறேன், அவர்கள் இனி கலங்க வேண்டியதில்லை, அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவியை நான் செய்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் இந்துத்துவாவின் இதயங்கள் பூட்டியிருந்தாலும் இஸ்லாத்தை இதயத்தில் சுமக்கும் இஸ்லாமியர்களின் இதயம் ஒருபோதும் பூட்டாது என்பதை பறைசாற்றும் விதமாக பஹ்ரைன் பிரதமரின் அறிவிப்பு உலகத்திற்கு பிரகடனம் செய்கிறது.



« PREV
NEXT »

No comments