Latest News

July 24, 2016

பல பில்லியன்களை கொள்ளையடித்த நாமல் சிறை கைதியிடம் கடன்பட்ட அவலம்
by admin - 0

நிதி மோசடி குற்றச்சாட்டிற்கமைய அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலையினுள் நாமல் சிகையலங்காரம் செய்து கொண்டதன் மூலம் இவ்வாறு கடன்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச விளக்கமறியல் படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலையினுள் குறித்த கைதியை சந்தித்துள்ளார்.

அந்தக் கைதி சிகையலங்காரம் செய்யும் நபராக செயற்படுவதோடு, கத்தரிக்கோல் மற்றும் சீப்புடன் சிறைச்சாலையில் நடமாடும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் விளக்க மறியலில் வைக்கப்படும் போது அடர்த்தியாக தலைமுடி காணப்பட்ட போதும், அவர் விடுதலையாகிய சந்தர்ப்பத்தில் சாதாரண அளவில் தலைமுடி காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது,

எப்படியிருப்பினும் கைதி மூலம் சிகையலங்காரம் செய்து கொண்ட நாமல், சேவைக்காக வழங்க தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

என்றாவது ஒருநாள் விடுதலையாகும் சந்தர்ப்பத்தில், தனக்கு சிகையலங்காரம் செய்ய வருமாறும் நாமல் கைதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments