யாழ்ப்பாணத்தீவுகளில் பெரிய தீவான வேலணைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரவணைக் கிராமத்தில் அருள்பாலிக்கும் சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் தேர்திருவிழா மிகவும் சிறப்பாக அருள் எழுச்சியுடன் இன்று இடம்பெற்றது இதில் பெருமளவில் முருகன் பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருளை வேண்டி நின்றார்கள் .
இதில் சிறப்பம்சமாக முருகன் பக்தர்களால் ஒரு காவடியில் 5 பேர் ஒன்றாக காவடி எடுத்துக்கொண்ட அழகு அனைவரையும் பக்தி பரவசத்திற்கு கொண்டு சென்றது அத்துடன் வாள் மேல் அமர்ந்து தூக்குகாவடியும் சரவணை கதிர்வேலாயுத சுவாமி அருளால் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment