Latest News

June 30, 2016

கொலையாளியின், புதிய போட்டோவை போலீசார் இன்று வெளியிட்டனர்
by admin - 0

சுவாதி கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பது இன்னும் தெரியாத நிலையில், வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு பார்த்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Share Up To 110 % - 10% Affiliate Program

சுவாதியை கொன்ற கொலையாளி, நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதிகளில் பதிவான கேமரா காட்சிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொலையாளியின் போட்டோ மற்றும் வீடியோ காட்சியை போலீசார் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட மறுநாளே கொலையாளி நடந்து செல்லும் படம் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் நடந்து செல்லும் நபர் யார்? என்பது தெளிவாக தெரியவில்லை.

அந்த போட்டோ வெளியிடப்பட்டு 6 நாட்களாகியும் யாரும் கொலையாளி பற்றி உறுதியான தகவல்களை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து கொலையாளியின் போட்டோவை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிந்து, கொலையாளியின் தெளிவான போட்டோவை போலீசார் இன்று மதியம் வெளியிட்டனர்.

பழைய போட்டோவில் கொலையாளி என்ன கலரில் உடை அணிந்துள்ளார் என்பது கூட தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று போலீசார் வெளியிட்ட போட்டோவில் கொலையாளி அணிந்திருக்கும் உடையின் நிறம் தெளிவாக தெரிகிறது.

நீலம் மற்றும் வெள்ளை கலரில் கட்டம்போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். கருப்பு கலரில் பேண்ட் அணிந்திருக்கும் கொலையாளி காலில் ஷூ அணிந்துள்ளார். தோளில் கல்லூரி மாணவர் போல டிராவல் பேக் ஒன்றையும் மாட்டியுள்ளார்.

இவை அனைத்தும் புதிய போட்டோவில் மிகவும் தெளிவாக தெரிகிறது. ஆனால் முகம் மட்டும் தெளிவாக இல்லை. இதனால் புதிதாக பார்ப்பவர்கள் கொலையாளியை அடையாளம் காண்பது சிரமமே.

ஆனால் கொலையாளியை அடிக்கடி பார்த்த நபர்களாக இருந்தால் அவர்களால் புதிய போட்டோவை பார்த்தவுடன் எளிதாக அவனை அடையாளம் காட்ட முடியும். அதற்கேற்ற வகையிலேயே போலீசார் வெளியிட்டிருக்கும் புதிய படம் உள்ளது.

எனவே கொலையாளியை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரியபடுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கர் கொலை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கொலையாளி பற்றி 8 தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். நாளைக்குள் கொலையாளியை பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

போலீசார் வெளியிட்டுள்ள கொலையாளியின் புதிய புகைப்படம் சுவாதி கொலை வழக்கு விசாரணைக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத் ருந்துதான் பார்க்க வேண்டும்.
« PREV
NEXT »

No comments