Latest News

June 30, 2016

ஸ்ரீலங்கா அமைச்சர் தற்கொலை முயற்சி
by admin - 0

மாணவர்களின் பாடசாலை அனுமதி தொடர்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஸ்ரீலங்கா பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மதுகம பிரதேச பாடசாலையொன்றில் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுக்காக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன் குறித்த மாணவர்களுக்கு நீதி வழங்கப்படாதவிடத்து தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ராஜினாமாச் செய்யவும் தயாராக இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இன்று நண்பகல் வரை மாணவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்காத நிலையில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மதுகமயிலுள்ள குறித்த பாடசாலையில் தற்கொலை முயற்சியொன்றை மேற் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரின் ஆதரவாளர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
« PREV
NEXT »

No comments